Wednesday, November 24, 2010

ஒளி இழக்கா… விழிகள்

100 முட்டைக் கோழிகள்> 550 ஒரு நாள் கோழிக் குஞ்சுகள்> 350 குஞ்சுகள்> 75 இறைச்சிக் கோழிகள்…

இவற்றையெல்லாம் ஒருவரே ஒருவரே வளர்க்கிறார் என்றால் நம்புவீர்களா?

பெரிய கோழிப்பண்ணை சாத்தியம்தான். இரண்டு கண்களும் தெரியாத ஒருவர் இவ்வளவும் செய்கிறார் என்றால் நம்புவீர்களா…?

யாழ்ப்பாணம் 2ஆம்; குறுக்குத் தெருவில் வசித்துவரும் கனகசபை என்கின்ற அசாதாரண மனிதரின் வீட்டுக்குப் போகுமுன் எனக்கும் நம்பமுடியாமல்தான் இருந்தது.

‘கன(க்)க’சபை

“அண்ணாக்கள்… அக்காக்கள்… கண்பார்வையிழந்தவர்களுக்கு உதவிசெய்வதற்காக ஒரு பத்து ரூபா அதிர்ஷ்டலாபச் சீட்டை வாங்கி உதவுங்கோ…”

போன நல்லூர் திருவிழாவில் இவ்வாறு கூவியழைத்துக்கொண்டிருந்த கண்பார்வை இழந்த சிலரை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

அவர்களுள் ஒருவரான கனகசபையிடம் டிக்கட்டை வாங்கியபடியே பேச்சுக்கொடுத்தபோதுதான், இவருக்குள் ‘கனக்க’ விசயங்கள் ஒழிந்திருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

அடுத்த நாளே ‘டான்’ என்று அவருடைய வீட்டுக்கு விசிட் அடித்தோம்.
அழகிய கூடு

யாழ்ப்பாணப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையிலான பழையதொரு வீடு. வாசலில் குருவிக்கூடு.

வீட்டின் பின்பகுதியில்… ஐந்து பெரிய கோழிக் கூடுகள்.

அந்த வீடே அழகியதொரு கூடுபோல்தான் இருந்தது.

“காலையில் கோழிகளுடன்தான் என்ரை நாள் ஆரம்பிக்கும்” என்று சொன்னபடி கோழிக்கூடு ஒன்றுக்குள்ளிருந்து வெளியே வந்த கானகச்பை
> உற்சாகத்துடன் ஒவ்வொரு கோழிக் கூடாக எமக்குக் காட்டத் தொடங்கினார்.

கண்பார்வையில்லாதவரால் எப்படி… என்று நாம் நினைப்பதற்குள்
> “சத்தத்தை வைத்தே குஞ்சுகளின் கூடுகளையும்> ஏனைய கூடுகளையும் அடையாளம் கண்டுகொண்டுவிடுவேன்” என்றார் புன்சிரிப்புடன்.

பாதங்களால் அடிகளை எண்ணி வைத்தே தாம் சரியாக ஒவ்வொரு இடத்துக்கும் செல்வதாகச் சொல்லப்படுவது தவறு என்று கூறும் கனகசபை
> கோழிகளுக்கு நோய் ஏற்பட்டாலும் அதனைத் தன்னால் கண்டுபிடித்துவிட முடியும் என்கிறார்.

“கோழிகளின் சத்தத்தை வைத்தே அவற்றுக்கு வருத்தம்; வந்துள்ளதா என்பதை அறிந்துகொண்டுவிடுவேன். மனைவியை அழைத்து ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று கேட்டுத் தெரிந்துகொள்வேன்” என்கிறார் அவர் உறுதியுடன்.

25 வருட அனுபவ முதிர்ச்சி அவருடைய பேச்சில் தெளிவாகத் தொனித்தது.

ஆம், க.பொ.த. சாதாரணதரம் படித்துக்கொண்டிருக்கும்போது தனது இரண்டு கண் பார்வைகளையும் இழந்த கனகசபை, 22வது வயது (இப்போது 47வயது) முதல் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாகச் சொல்கிறார்.

2008ஆம் ஆண்டு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தால் சிறந்த பண்ணையாளராக இவர் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வங்கிக் கடன் மூலமே கோழி வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியதாகக் கூறும் கனகசபை
> இப்போதும்கூட வங்கிக் கடன்களைக் கொண்டே கோழி வளர்ப்பில் முன்னேறி வருவதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்.

‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் தமது சங்கத்திலுள்ள பலருக்கு வங்கிக் கடன் வழங்கியிருப்பதாகவும் அவர்; மகிழ்கிறார்.

கரம்பிடித்த கதை

கனகசபையுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போதே, கையில் குளிர்பானத்துடன் வந்தவர் அவருடைய மனைவி சிவநந்தினி (40).

தனது அன்றாட வாழ்க்கையில் 50 சதவீதம்; மனைவியின் பங்களிப்புத்தான் என்று பெருமையுடன் அவரை எமக்கு அறிமுகப்படுத்தினார் கனகசபை.

‘இருவரும் இணைந்த கதையைக் கூறுங்களேன்…” என்றேன் விடாமல்.

“ஐ.சி.ஆர்.சி.யில் டைப்பிங் வகுப்பிற்குச் செல்லும்;போதே இவரை நான் சந்தித்தேன். நாங்கள் லவ் பண்ணித்தான் கல்யாணம் செய்தனாங்கள். எனது வீட்டில் நான் ஒரேயொரு பெண் பிள்ளையென்பதால் எதிர்ப்பு இருந்தது” என்று சொன்ன அந்தப் புண்ணியவதி.

“அப்பாவும், தம்பியும் இதுவரை எங்களுடன் கதைப்பதில்லை” என்றார் வேதனையுடன்.

ஆரம்பத்தில் தேர்தல்கள் திணைக்களத்தில் பணியாற்றியபோதும்
> குழந்தைகள் பிறந்த பின்னர் வேலையிலிருந்து விலவிட்டதாகக்கூறிய அவர்> கனகசபை செல்லவேண்டிய இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் தானே அவரை அழைத்துச் செல்வதாகவும் கூறுகிறார். (வாழ்க்கைத்துணை என்பதன் முழு அர்த்தம் இதுதான்போலும்)

துவாரகன்(10)
> அபிராமி (8) ஆரூரன் (5) என்று மூன்று பிள்ளைச் செல்வங்களின் படிப்பையும் தான் கவனித்துக் கொள்கின்றபோதும்> காலையில் பிள்ளைப் பாடசாலைக்குத் தயார்ப்படுத்தி அனுப்புவதென்னவோ கனகசபையின் பொறுப்புத்தான் என்று எமது பிரமிப்பை மேலும்; அதிகரித்தார் அவர்.

பிறர்க்கென வாழ்தல்

வீட்டுப் பொறுப்புக்கள் போக
> கண்பார்வையற்றோர் சங்கத்தின் பொருளாளராகவும் பணியாற்றிவரும் கனகசபை> பகல் பொழுது பெரும்பாலும் சங்க வேலைகளிலேயே கழிவதாகக் கூறுகிறார்.

தனது வாழ்வில் திடீரென இருள் சூழ்ந்தும்;கூட சுதாரித்துக்கொண்டு மீண்டெழுந்J> தனக்கென மட்டும் வாழாது
> தன்னைப்போன்ற பிறர்க்காகவும் பாடுபடும் இவரது தன்னம்பிக்கை> தற்றுணிவு, பெருந்தன்மை> மனிதநேயம் என்பவற்றை வியந்தபடி அவர்களிடம் விடைபெற்றோம்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ‘சிகரம்; தொடு’ மாதாந்த சஞ்சிகை (ஒக்டோபர்)க்காக எழுதியது

2 comments:

Yarlpavanan said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Yarlpavanan said...


புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/